2017-03-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சீதாவக்கை நீர்மின் உற்பத்தி கருத்திட்டத்தின் நிருமாணிப்பு பணிகள் தொடர்பான மதியுரைச் சேவைகள் ஒப்பந்தத்தை வழங்குதல் - கேகாலை மாவட்டத்தின், தெஹிஓவிட்ட பிரதேச செயலகப் பிரிவின் ஹிங்குரலகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள உத்தேச 20 மெகாவொட் சக்தி கொள்திறனுடைய சீதாவக்கை நீர்மின் உற்பத்தி நிலைய கருத்திட்டத்திற்கு தேவையான மதியுரைச் சேவைகள் ஒப்பந்தத்தை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு வழங்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |