• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெதுறு ஓயா நீர்வழங்கல் கருத்திட்டம் - மதியுரைச்சேவை வடிவமைப்பினை மீளாய்வு செய்தலும் நிர்மாணிப்பு மேற்பார்வையும்
- தெதுறு ஓயா நீர்வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கொரியாவின் ஏற்றுமதி - இறக்குமதி வங்கியின் பொருளாதார அபிவிருத்தி கூட்டுத்தாபன நிதியத்திடமிருந்து 58.15 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன் தொகையொன்றை பெற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்தினால் 2014 ஆம் ஆண்டில் கடன் உடன்படிக்கையொன்று செய்து கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கடன் தொகையைப் பயன் படுத்தி தெதுறுஓயா நீர்வழங்கல் கருத்திட்டத்தின் மதியுரைச்சேவை ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.