2017-03-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு விமான நிலைய ஹோட்டல்களை நிருமாணித்தலும் தொழிற்படுத்துதலும் - கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தும் விமான பயணிகளின் எண்ணிக்கை துரிதமாக அதிகரித்து வருவதை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இந்த விமான நிலையம் அமைந்துள்ள விமான நிலையங்கள், விமான சேவைகள் கம்பனிக்குச் சொந்த மான இரண்டு காணித்துண்டுகளில் ஆகக் குறைந்தது 100 அறைகளைக் கொண்ட விமான நிலைய ஹோட்டல்கள் இரண்டினை நிருமாணித்து, தொழிற்படுத்தும் பொருட்டு பொருத்தமா முதலீட்டாளர்களை தெரிவு செய்வதற்கான பிரேரிப்புகளை கோருவதற்காக அமைச்சரவையினால் 2016‑05‑10 ஆம் திகதியன்று அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக முன்வைக்கப்பட்ட பிரேரிப்புகளை மதிப்பிட்டு அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட நிலையியற் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் மலேசியாவின் E.C.M.Libra Financial Group Berhad கம்பனி, சிங்கப்பூர் T.P.Real Estate Holdings (Pvt) Ltd., கம்பனி ஆகிய முதலீட்டாளர்களுக்கு உரிய இரண்டு காணித் துண்டுகளையும் இரண்டு ஹோட்டல்களை நிர்மாணித்து நடாத்திச் செல்வதற்காக 40 வருட காலப்பகுதிக்கு குத்தகை அடிப்படையில் வழங்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக் கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |