2017-03-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பருவமடையாத வர்களின் மரணங்கள் மீது இழப்பீடுகளை அறவிடுதல் - எவரேனும் மூன்றாவது தரப்பின் கவனயீனம் அல்லது பாதுகாப்பற்ற நிலைமை காரணமாக பருவமடையாத குழந்தையின் மரணம் சம்பவிக்கப்பட்டவிடத்து குறித்த குழந்தையின் பெற்றோர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல், எதிர்கால பாதிப்புகள் சார்பில் பொறுப்பு சொல்ல வேண்டிய தரப்பினரிடமிருந்து இழப்பீடுகளை அறவிடுவதற்கு இயலுமாகும் வகையில் சட்டம் தயாரிக்கப்பட வேண்டுமென பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இதற்கான ஏற்பாடுகளை செய்து பொருத்தமான சட்டங்களை வரையும் பொருட்டு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |