• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உல்லாசப் பயணிகளுக்கு புகையிரத நிலையங்களுக்கு அண்மையில் தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்தல்
- இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் புதிய எண்ணக்கருவாக பிரேரிக்கப் பட்டுள்ளவாறு இலங்கை புகையிரத திணைக்களத்தினால் அப்புறப்படுத்தியுள்ள தற்போது பயன்படுத்தப்படாத புகையிரதப் பெட்டிகளை பழுதுபார்த்து கொழும்பு புகையிரத முனைவிடம், மஹய்யாவ உப புகையிரத நிலையம், நானுஓயா, அம்பேவெல, எல்ல மற்றும் தொடந்தூவ புகையிரத நிலையங்களுக்கு அண்மையில் உள்ள புகையிரத திணைக்களத்தினால் பயன்படுத்தப்படாத காணிகளில் இந்த புகையிரதப் பெட்டிகளை வைத்து சுற்றுலா பயணிகளின் தங்குமிட தேவைகளுக்காக பயன்படுத்தும் பொருட்டு குத்தகைக்களிப்பதன் மூலம் புகையிரதத் திணைக்களத்திற்கு மேலதிக வருமானம் பெற்றுக்கொள்ள முடியுமென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.