• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதிய களனி பாலத்திலிருந்து அத்துருகிரிய வரையில் நில மட்டத்திலிருந்து மேலாகச் செல்கின்ற அதிவேக நெடுஞ்சாலை
- பத்தரமுல்லை, மாலம்பே, அத்துருகிரிய, வௌிச்சுற்று நெடுஞ்சாலை வரை யிலான இணைப்புடன் தரையிலிருந்து மேலாக செல்லும் அதிவேக நெடுஞ்சாலையொன்றை உத்தேச புதிய களனிப் பாலத்திலிருந்து ராஜகிரிய வரை நிருமாணிப்பதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் முதலாம் கட்டத்தின் கீழ் களனிப்பாலத்திலிருந்து ராஜகிரிய வரையிலான 6.9 கி.மீ நீளமான பகுதியும் இதன் இரண்டாவது கட்டத்தின் கீழ் ராஜகிரியிவிலிருந்து அத்துருகிரிய வரையிலான 10.4 கி.மீ நீளமான பகுதியும் நிருமாணிக்கப்படவுள்ளது. “நிருமாணித்து செயற்படுத்தி கையளித்தல்" என்னும் அடிப்படையில் நியமிக்கப்பட்வுள்ள இந்த கருத்திட்டத்தின் கட்டம் I சார்பில் அபிப்பிராய வௌிப்படுத்தல் கடிதங்கள் 14 உம் கட்டம் II சார்பில் 09 கடிதங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. இதற்கமைவாக இந்த கருத்திட்டத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள கருத்திட்ட குழுவின் சிபாரிசின் பிரகாரம் சாத்திய தகவாய்வு உட்பட ஆரம்ப திட்டங்களை தயாரிப்பதற்கு மதிரைஞர்களை தெரிவு செய்வதற்கும் விருப்புத் தெரிவித்த நிறுவனங்களிலிருந்து பிரேரிப்புகளுடன் கேள்வி கோருவதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.