2017-03-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தனித்திறமை மிக்க சேவைக்கான ஆற்றல் அபிவிருத்தி - 2017/2018 - இலங்கை அரசாங்கத்திற்கும் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக அரசாங்க சேவையின் 70 மத்திய மட்ட நிறைவேற்று உத்தியோகத்தர்களுக்கு சிங்கப்பூர் சிவில் சேவைகள் கல்லூரியில் விசேட ஆற்றல் அபிவிருத்தி பயிற்சி ஒன்று 2016 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்களின் விசேட ஆற்றல் தேவைகளை மேலும் விருத்தி செய்வதற்காக "சேவை தனித்துவத்திற்கு ஆற்றல் அபிவிருத்தி" என்னும் தலைப்பில் நடுத்தவணைக்கால பயிற்சி நிகழ்ச்சித் திட்டமொன்று 2017-2018 காலப்பகுதியில் சிங்கப்பூர் சிவில் சேவைகள் கல்லூரியினாலும் இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனத்தினாலும் கூட்டாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினாலும் பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்ர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |