• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இன்னல்களுக்கு ஆளாகிய ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது சம்பந்தமான குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துதல்
- 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் பல்வேறு இன்னல்களுக்கும் அடக்கு முறைகளுக்கும் ஆளாகிய ஊடக வியலாளர்கள் பற்றி ஆராய்வதற்காக அதிமேதகைய சனாதிபதி அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் சனாதிபதியின் செயலாளரினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இத்தகைய இன்னல்களுக்கும் அடக்கு முறைகளுக்கும் ஆளான ஊடகவியலாளர்களுக்கு அவர்களுடைய மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கு குறித்த குழுவினால் பத்திரிகை விளம்பரம் மூலம் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன்போது முன்வைக்கப்பட்ட மேன்முறையீடுகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இந்தக் குழுவினால் உரிய ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது சம்பந்தமாக அதன் சிபாரிசுகளை உள்ளடக்கிய அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையை மேலும் ஆராய்ந்து அமைச்சரவைக்கு விடயங்களை அறிக்கையிடுவதற்காக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், நீதி அமைச்சர், பாராளுமன்ற புனரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் ஆகியோர்களைக் கொண்ட அமைச்சரவை உப குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.