2017-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உயர்கல்வி விரிவாக்கல் மற்றும் அபிவிருத்தியை துரிதப்படுத்துதல் - பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான விஞ்ஞானம், தொழினுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களுக்குரியதாக உயர்கல்வி நுழைவினை அதிகரித்தல், உயர்கல்வி துறையின் தரத்தினை விருத்தி செய்தல், புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பணிகளை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களை அடையும் நோக்கில் "உயர்கல்வி விரிவாக்கல் மற்றும் அபிவிருத்தியை துரிதப்படுத்துதல் நடவடிக்கைமுறை“ என்னும் கருத்திட்ட மொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 2017-2022 காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த கருத்திட்டத்திற்கு 33 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு சமமான விசேட எடுத்தல் உரிமை கடன் வசதியொன்றை வழங்குவதற்கு உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி சமவாயம் உடன்பாடு தெரிவித்துள்ளதோடு, 67 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன் வசதியொன்றை வழங்குவதற்கு மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியினால் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, உரிய கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக இணக்கப்பேச்சுகளை நடாத்துவற்காகவும் கடன் உடன்படிக்கைகளைச் செய்து கொள்வதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |