2017-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அம்பாந்தோட்டை துறைமுக சலுகை உடன்படிக்கை - அம்பாந்தோட்டை துறைமுகம் சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்திற்கும் சீன அரசாங்கத்திற்குச் சொந்தமான China Merchant Port Holdings கம்பனிக்கும் இடையில் செய்து கொள்ளப்படவுள்ள சலுகை உடன்படிக்கையின் கீழ் தற்போது வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தின் I ஆம் II ஆம் கட்டங்களையும் உத்தேச III ஆம் கட்டத்தையும் உள்வாங்கும் விதத்தில் துறைமுகத்தின் எதிர்கால திட்டங்களைத் தயாரித்தல், நிதி வழங்குதல், கையாள்கையை மேம்படுத்துதல், உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் என்பன நோக்கங்களாகும். சட்டமா அதிபரினால் இசைவாக்கம் வழங்கப்பட்டுள்ள இந்த சலுகை உடன்படிக்கையைச் செய்து கொள்வதற்கும் இந்த சலுகை உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதனை மேற்பார்வை செய்வதற்குமாக விசேட கடமைப் பொறுப்புக்கள் அமைச்சர் (கலாநிதி) சரத் அமுனுகம அவர்களின் தலைமையில் உரிய ஏனைய அமைச்சர்களைக் கொண்ட அமைச்சர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |