2017-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தன்னார்வ வௌிப்படுத்தல் சட்டமூலத்தினை வரைதல் - தன்னார்வ வௌிப்படுத்தல் சட்டத்தின் பிரதான நோக்கம் இலங்கையில் ஈட்டப்படும் வருமானத்திற்குரியதாக வருமான வரியினை செலுத்துவது தொடர்பில் நிலுவையாகவுள்ள வரிமான வரியினை தீர்வு செய்யும் பொருட்டு வருமான வரி செலுத்த வேண்டியவர்களுக்கு அனுமதி வழங்குதலும் உள்நாட்டு இறைவரிச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் வருமான வரி செலுத்துவதை ஆரம்பிக்கும் பொருட்டு ஊக்குவித்தலுமாகும். இதற்குச் சமமான தன்னார்வ வௌிப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டங்கள் பல நாடுகளில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுவதோடு, இதன் ஊடாக அந்த நாடுகள் வரி வருமானத்தை அதிகரித்துக் கொள்வதில் வெற்றி கண்டுள்ளன. இதற்கமைவாக வரையப்பட்டுள்ள கருதுகோள் பத்திரத்திற்கு அமைவாக "தன்னார்வ வௌிப்படுத்தல் சட்டமூலத்தை" வரையுமாறு சட்டவரைநருக்கு பணிப்பு விடுக்கும் பொருட்டு பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |