2017-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மெதிரிகிரிய நீர்வழங்கல் திட்டம் - கட்டம் III - பிசோபுர மற்றும் குமுதுபுர நீர்த் தாங்கிகளின் பிரதான பம்பி நிலையங்கள் குழாய்களை பதித்தலும் துணைக் கருவிகளை பொருத்துதலும் - சுமார் 3,057 மில்லியன் ரூபா செலவில் நிருமாணிக்கப்படும் மெதிரிகிரிய நீர்வழங்கல் திட்டத்தின் III ஆம் கட்டமானது "ரஜரட்ட நவோதய - பொலன்நறுவையை எழுச்சிப் பெற செய்வோம்" அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் 09 நீர்வழங்கல் கருத்திட்டத்தில் ஒன்றாகும். இந்த கருத்திட்டத்தின் மூலம் மெதிரிகிரிய பிரதேச செயலகப் பிரிவின் 14 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைத் தழுவி குழாய்நீர் வசதிகள் வழங்கப்படும். இதற்கமைவாக, இந்த கருத்திட்டத்தின் கீழ் பிசோபுர மற்றும் குமுதுபுர நீர்த் தாங்கிகளின் பிரதான பம்பி நிலையங்கள் சார்பில் குழாய்கள், பொருத்துகை கருவிகள் மற்றும் வால்வுகள் வழங்கி பதிப்பதற்கான ஒப்பந்தத்தை, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 678.06 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு அனுசரணையான ஆகக்குறைந்த மதிப்பீட்டு விலையை முன்வைத்த கேள்விதாரர்களான M/s. Sanken Constructions (Pvt) Ltd)., Vonlan Construction (Pvt) Ltd)., - JV கம்பனிகளுக்கு வழங்கும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |