• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1901 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க நாய்களைப் பதிவு செய்யும் கட்டளைச் சட்டத்தை திருத்துதல்
- கட்டாக்காலி நாய்களினால் பொதுமக்களுக்கு பல்வேறுபட்ட சிரமங்களுக்கு முகம்கொடுக்க நேரிட்டுள்ளதோடு, 1901 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க நாய்களைப் பதிவு செய்யும் கட்டளைச் சட்டத்தில் இந்த பிரச்சினையைக் கையாள்வதற்கு போதுமான சட்ட ஏற்பாடுகள் இல்லையென்பது தெரியவந்துள்ளது. நாய்களைப் பதிவு செய்யும் கட்டளைச் சட்டத்தையும் விசர்நாய்க்கடி நோய் கட்டளைச் சட்டத்தையும் இல்லாதொழித்து இந்த சகல பிரச்சினைகளையும் தழுவக்கூடிய புதிய சட்டமொன்றை வரைவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் இந்த நோக்கமானது இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை. இதற்கமைவாக கட்டாக்காலி நாய்கள் தொடர்பான பிரச்சினையை உடனடியாகத் தீர்க்கும் தேவையை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, கட்டாக்காலி நாய்களாக அலைந்து திரிவதற்கு இடமளிக்கும் அவற்றின் உரிமையாளர்களுக்கு நீதிமன்றத்தின் ஊடாக விதித்துரைக்கப் படக்கூடிய தண்டத் தொகையை 25,000/= ரூபாவரை அதிகரிக்கும் வழங்கப்படக்கூடிய சிறைத் தண்டனையை இரண்டு (02) வருடங்கள் வரை அதிகரிக்கும் நாய்களைப் பதிவு செய்யும் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டத்தை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.