2017-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
புதிதாக நிருமாணிக்கப்படுகின்ற தொடர்மாடி வீடுகளுக்கு தபால் வசதிகளை வழங்கும் பொருட்டு தொடர்மாடி வீடுகளை நிருமாணிக்கும் போது கீழ் மாடியில் தபால் பெட்டிகள் நிர்மாணிக்கப்படுவதை கட்டாயப்படுத்தல் - தொடர்மாடி வீடுகளில் வசிப்பவர்களுக்கு கடிதம் மற்றும் தபால் பொருட்களை வழங்கும்போது தபால்காரர்கள் பல்வேறுபட்ட நடைமுறைப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதோடு, இதன் காரணமாக தொடர்மாடி வீடுகளில் கடிதம் மற்றும் தபால் பொருட்களை விநியோகிக்கும் பணியினை சிறந்த மட்டத்தில் மேற்கொள்வதற்கு இயலாமற் போயுள்ளது. இதற்கமைவாக இந்த நிலைமைக்குத் தீர்வொன்று வழங்கும் நோக்கில், இதன் பின்னர் தொடர்மாடி வீடுகளை நிருமாணிக்கும் போது அந்தந்த வீட்டு அலகுகளுக்கு தபால்பெட்டி ஒன்றுவீதம் கீழ்மாடியில் புறம்பான பிரதேசமொன்றில் தபால் பெட்டிகளை நிருமாணித்து அவற்றை வீட்டு இலக்கங்களின் கீழ் இலக்கமிடுவதற்கும் தற்போது நிருமாணிக்கப்பட்டுள்ள தொடர்மாடி வீட்டுத் தொகுதிகளில் தபால் பெட்டிகளுடனான பிரதேசமொன்றை கீழ்மாடியில் தாபிப்பதனை கட்டாயமாக்குவதற்கும் வீட்டு இலக்கங்கள் குறிப்பிடப்பட்ட தபால்பெட்டிகளின் திறப்புகளை உரிய வீட்டு உரிமையாளர்களுக்கு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி அதிகாரசபை, வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ஆலோசனை வழங்குமாறு இந்த நிறுவனங்களுக்குப் பொறுப்பான அமைச்சுக்கு அறிவிப்பதற்கும் தொடர்மாடி வீடுகளை நிருமாணிப்பதற்கான கட்டடத்திற்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளும் போது மேற்குறிப்பிடப்பட்டுள்ளவாறு நடவடிக்கை எடுப்பதனைக் கட்டாயமாக்கும் பொருட்டு அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |