• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான பேலியகொடவிலுள்ள காணியை அபிவிருத்தி செய்தல்
- நீர்கொழும்பு - கொழும்பு பிரதான வீதிக்கும் கட்டுநாயக்க - கொழும்பு அதிவேகப் பாதையின் நுழைவு வீதிக்கும் முன்பாக அமைந்துள்ள 14.5 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட காணி அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமானதோடு, இந்த காணியின் அளவு மற்றும் அமைவிடம் என்பவற்றை கவனத்திற் கொள்ளும் போது இதனை பாரிய அளவிலான அபிவிருத்தி நோக்கமொன்றுக்கு பயன்படுத்த முடியுமென அவதானிக்கப்பட்டது. முக்கியமாக வர்த்தக மற்றும் தங்குமிட வசதிகளைக் கொண்ட கலப்பு அபிவிருத்திக் கருத்திட்டமொன்றுக்கு இந்தக் காணியை பயன்படுத்துவதற்கு உயர் சாத்தியம் நிலவுகின்றது. இதற்கமைவாக, மேற்போந்த காணியினுள் நடைமுறைப்படுத்தக் கூடிய பயனுள்ள அபிவிருத்திக் கருத்திட்டப் பிரேரிப்புகளை அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தினால் இனங்காண்பதற்கும் காணி அபிவிருத்திக்குரிய நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கு, பிரேரிப்புகளை மதிப்பிடுவதற்கு அத்துடன் பரிசீலனை செய்வதற்கு அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்படும் இணக்கப்பேச்சுக் குழுவொன்றை நியமிப்பதற்கும் இந்த இணக்கப்பேச்சுக் குழுவிற்கு ஒத்தாசை நல்கும் பொருட்டு இயைபுள்ள நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட கருத்திட்டக் குழுவொன்றை நியமிப்பதற்குமாக வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.