• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சூரிய மின் பலகங்களை தங்களுடைய இல்லங்களின் கூரைகளின் மீது நிறுவுவதற்காக மின்சார பாவனையாளர்களுக்கு கடன் வசதிகள் தொடர்பில் வட்டி சலுகை வழங்குதல்
- மாதாந்த மின்சாரப் பட்டியலானது 2,000/= ரூபாவிற்கு கூடுதலாக உள்ள வீடுகளின் வலுசக்தி தேவையை சூரிய சக்தி மூலம் நிறைவு செய்வதற்கான சலுகைக் கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு 2017 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் பிரேரிக்கப்பட்டுள்ளது. ஆயினும் நாட்டிலுள்ள மின்சார பாவனையாளர்களில் சுமார் 40 சதவீதமானோரின் மாதாந்த மின்சாரப் பட்டியல் 300/= ரூபாவைவிட குறைவானது என்பதனால் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை மிக வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு உரிய கடன் வட்டிச் சலுகையை முன்னர் திட்டமிட்டவாறு மாதாந்த மின்சார பட்டியல் 2,000/= ரூபாவைவிட கூடுதலாகவுள்ள மின்சார பாவனையாளர்களுக்கு மாத்திரம் வரையறுக்காது சகல வீட்டுப் பாவனையாளர்களுக்கு ஏற்புடையதாக்குவதற்கும் இதன்சார்பில் அரசாங்க அல்லது எந்தவொரு தனியார் வங்கியிலிருந்தும் பெற்றுக் கொள்ளப்படும் கடன் சார்பில் வட்டிச் சலுகை வழங்குவதற்கான கடன் வட்டிச் சலுகை வழங்குவதற்கான உத்தேச கடன் தொகையின் எல்லையை 150,000/= ரூபாவிலிருந்து 350,000/= ரூபா வரை அதிகரிப்பதற்குமாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.