• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்காக ஞாபகார்த்த தேயிலைப் பொதிகளை வழங்குதல்
- இலங்கை தேயிலையை விற்பனை செய்யும் பிரதான தேயிலை வியாபாரச்சின்ன உரிமையாளர்கள் ஒருசிலரின் பங்களிப்புடன் சுற்றுலாப் பயணிகளுக்கிடையில் இலங்கை தேயிலையின் அடையாளத்தை மீள கொண்டு செல்வதற்கும் இலங்கையில் விருந்தாளிகளுக்கான உபசரிப்பு பற்றிய எண்ணத்தை அவர்களிடத்தில் வளர்ப்பதற்குமாக தரம் மிக்க இலங்கை தேயிலையை தெரிவுசெய்யப்பட்ட நாடுகளைச் சேர்ந்த விமானப் பயணிகளுக்கு அவர்கள் இலங்கையிலிருந்து வௌியேறும் சந்தர்ப்பத்தில் ஞாபகார்த்த பரிசொன்றாக இலவசமாக வழங்குவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதனுடன், இலங்கை தேயிலையின் மிகச் சிறந்த தரம் பற்றியும் அவர்களுடைய நாடுகளில் இலங்கை தேயிலையை கொள்வனவு செய்ய முடியுமாவது எவ்வாறு என்பது பற்றியதுமான தனவல்களை உள்ளடக்கிய கைநூலொன்றும் வழங்கப்படும். இதற்கமைவாக இலங்கை தேயிலை சபையின் தேயிலை மேம்பாடு மற்றும் விற்பனை நிதியத்தியிலிருந்து 100 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி மேற்போந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.