• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மருத்துவமனை சிகிச்சை கழிவுப் பொருட்கள் முகாமைத்துவ கருத்திட்டமொன்றுக்காக காணித் துண்டொன்றை குத்தகைக்களித்தல்
- கொழும்பு மற்றும் அதற்கண்மித்த பிரதேசங்களில் அரசாங்க மற்றும் தனியார் மருத்துவமனைகள் வளர்ச்சிகண்டுள்ளதுடன் இந்த மருத்துவமனைகளிலிருந்து வௌியேற்றப்படும் சிகிச்சை கழிவுப் பொருட்கள் பாரிய அளவில் அதிகரித்துள்ளன. சுற்றாடல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் எழாதவாறு இந்த கழிவுப் பொருட்களை உரிய வழிமுறைக்கு அமைவாக அப்புறப்படுத்துவது அத்தியாவசியமானதாகும். சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகாரசபை, Sisili Hanaro Encare (Pvt) Ltd கம்பனி என்பன இணைந்து சிகிச்சை கழிவுப் பொருட்கள் முகாமைத்துவக் கருத்திட்டமொன்றை முள்ளேரியா மருத்துவமனையில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளன. இதற்காக முத்துராஜவெல வில் உள்ள ஏக்கர் 2 றூட் 1 பேர்ச்சர்ஸ் 23.99 விஸ்தீரணம் கொண்ட காணித் துண்டொன்றை 30 வருட காலத்திற்கு Sisili Hanaro Encare (Pvt) Ltd கம்பனிக்கு குத்தகைக்களிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.