2017-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வைத்தியசாலைகளிலும் பிராந்திய மருத்துவ வழங்கல் பிரிவுகளிலும் மருந்து வழங்கல் வசதிகளை பலப்படுத்துதல் - வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துகள், அறுவை சிகிச்சைகளுக்கான பொருட்கள், இரசாயனகூட பொருட்கள், கதிரியல் பொருட்கள் மற்றும் அச்சுமூலப் பொருட்கள் என்பவற்றை வழங்குவது தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய பிரதான மைய நிறுவனமானது சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் கீழுள்ள மருத்துவ வழங்கல் பிரிவாகும். ஆதலால், தரம் வாய்ந்த மருத்துவ வழங்கலானது உரிய நேரத்தில் நோயாளிகளுக்கு சென்றடையவும் முக்கியத்துவமானது கவனத்திற்கு எடுத்துக் கொண்டு வைத்தியசாலைகளில் மருந்து களஞ்சிய வசதிகளை விருத்தி செய்தல், பிராந்திய வைத்தியசாலைகள் வரை மருத்துவ வழங்கல் முகாமைத்துவ தகவல் முறைமையை விரிவுபடுத்தல் என்னும் இரண்டு கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, 712 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் 134 வைத்திய சாலைகளிலும் 26 பிராந்திய மருத்துவ வழங்கல் பிரிவுகளிலும் மருந்துப் பொருள் களஞ்சிய வசதிகளை விரிவுபடுத்தும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் 954 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் பிராந்திய வைத்தியசாலைகள் மட்டம் வரை மருத்துவ வழங்கல் முகாமைத்துவ தகவல் முறைமையை விரிவுபடுத்தும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குமாக சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |