2017-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையில் 20 அரசாங்க வைத்தியசாலைகளுக்கு படம் காப்பக தொடர்பாடல் முறைமையொன்றை / கதிரியல் தகவல் முறைமையொன்றை தாபித்தல் - இலங்கையில் அனைத்து வைத்தியசாலைகளுக்கும் நாளாந்தம் வரும் நோயாளிகள் மற்றும் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் பெருமளவிலானோரின் நோய்களை நிர்ணயிப்பதற்குத் தேவையான பல்வேறுபட்ட அறிக்கைகள் பெற்றுக் கொள்ளப்படுதல் வேண்டும். இந்த நோயாளிகளில் பல்வேறுபட்ட உட்சிக்கல் நிலைமை வாய்ந்த நோய் நிலைமைகளுக்கு ஆளான நோயாளிகளும் உள்ளதோடு, அவரகள் சம்பந்தமாக எந்நேரமும் நோய்களை நிர்ணயிக்க வேண்டியுள்ளது. இதன்சார்பில் மருத்துவ அறிக்கைகளை மீண்டும் பரிசீலிக்க கூடிய விதத்தில் வைத்துக் கொள்வது அத்தியாவசியமானதாகும். இந்த அறிக்கைகளில் பல வைத்தியசாலைகளில் களஞ்சியப்படுத்தி வைக்கப்படுவதோடு, சில அறிக்கைகள் நோயாளிகள் கைவசமிருக்கும். இந்த தகவல்கள் பிற்காலத்தில் தேவைப்படுமிடத்து இலகுவாக பெற்றுக் கொள்ளும் பொருட்டு நவீன தொழினுட்ப உதவியுடன் தரவுகளை களஞ்சியப்படுத்தி பாதுகாப்பது காலத்தின் தேவையாகும். இதற்கமைவாக, படம் காப்பக தொடர்பாடல் முறைமையொன்றையும் கதிரியல் தகவல் முறைமையொன்றையும் 20 அரசாங்க வைத்தியசாலைகளில் தாபிக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |