2017-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசாங்க - தனியார் பங்களிப்பின் மூலம் அரசாங்கத்துறை சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகளுக்கு முதலீடு செய்தல் - உட்கட்டமைப்பு வசதிகள் சார்ந்த அபிவிருத்தி கருத்திட்டங்கள் அரசாங்க நிதிகளின் மீது தங்கியிருப்பதன் காரணமாக இலங்கையில் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி பணிகள் வலயத்திலுள்ள ஏனைய போட்டிகரமான நாடுகளுடன் ஒப்பிடும் போது பின்னடைந்த நிலையில் காணப்படுகின்றன. இந்த நிலைமை அரசாங்கத்தின் நிதி செயற்பாட்டின் மீது கடும் தாக்கத்தை செலுத்தியுள்ளது. இந்த பின்னணியில் நாட்டின் எதிர்கால உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு வேறு நாடுகளில் வெற்றிகரமாக கையாளப்பட்டுள்ள அரசாங்க - தனியார் பங்களிப்பு முறைகளை பயன்படுத்துவது முக்கியமானதாகும். இதற்கமைவாக வெற்றிகரமான அரசாங்க தனியார் பங்களிப்பின் மூலம் நாட்டினுள் வௌிநாட்டு முதலீடுகளை கவரும் பொருட்டு பொருத்தமான பொறிமுறையொன்றை வகுத்தமைப்பதற்கு அமைச்சர வையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவொன்றையும் கருத்திட்டக் குழுவொன்றையும் நியமிக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |