• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்கத்திற்குச் சொந்தமான கூட்டாதனம் மற்றும் கூட்டாதனமல்லாத சொத்துக்களில் நீண்ட காலம் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு அவற்றின் உரிமையை உடமையாக்குதல்
- 2017 ஆம் அண்டில் அரசாங்க - தனியார் பங்குடமையின் கீழ் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 500,000 வீட்டு அலகுககளை நிருமாணிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதோடு, கூட்டாதனம் மற்றும் கூட்டாதனமல்லாத சொத்துக்களில் 15 வருடங்களுக்கு மேலாக வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு இந்த சொத்துக்களின் உரிமையை உடமையாக்குவதற்கு 2017 வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, அத்தகைய வீடுகளின் குடியிருப்பாளர்களுக்கு அவற்றின் உரிமையை வழங்குவதற்காக பொருத்தமான பொறிமுறையொன்றை வகுத்தமைக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.