2017-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நெதர்லாந்தின் சலுகை நிதி வசதிகள் - நெதர்லாந்து அரசாங்கத்தினால் அந்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கம்பனிகளின் ஊடாக இலங்கையில் கிராமிய பாலங்களை நிருமாணித்தல், பொலன்நறுவை தொழில்பயிற்சி நிலையத்தை நிருமாணித்தல், மீரிகம நீர்வழங்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் அடங்கலாக பல கருத்திட்டங்களுக்கு சலுகை நிதி வசதிகளை வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தக் கருத்திட்டங்கள் சம்பந்தமாக அக்கறை கொண்டுள்ள நெதர்லாந்து கம்பனிகளினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட பிரேரிப்புகளை மதிப்பிடுவதற்கு உரியதாக தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |