• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிணையங்கள் பரிவர்த்தனை சட்டமூலம்
- தற்போது மூலதன சந்தை முகங்கொடுக்கும் சவால்களுக்கு ஏற்றவாறு 1987 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஹொங்கொங் நாடுகளில் இது சம்பந்தமாக நடைமுறையிலுள்ள சட்ட அடிப்படை கோட்பாடுகள் மற்றும் அனுபவங்கள் ஆகியவற்றை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு தயாரிக்கப்பட்ட வரைவு கருதுகோள் பத்திரமானது துறைசார்ந்த நிபுணர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டு மேலும் திருத்தப்பட்டுள்ளது.

இதற்கமைவாக முறையாக ஒழுங்குறுத்தப்பட்ட பங்குச் சந்தையொன்றாக உள்நாட்டு வௌிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெல்வதற்கு இயலுமாகும் வகையில் இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் சுயாதீன தன்மையை பலப்படுத்துவதற்கும் இலங்கை பொருளாதாரத்தின் மூலதன உற்பத்தியின் மாற்றீடாக மூலதன சந்தையை மிகக் கவரும் நோக்கில் இந்த வரைவு கருதுகோள் பத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு "பிணையங்கள் பரிவர்த்தனை சட்டமூலம்" என்னும் பெயரில் புதிய சட்டமூலமொன்றை வரையும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.