• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கட்டுநாயக்க பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தை மேம்படுத்தும் கருத்திட்டம்
- வருடாந்தம் உள்வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 300 இலிருந்து 500 வரை அதிகரிப்பதை நோக்காகக் கொண்டு கட்டுநாயக்க பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தை மேம்படுத்தும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, உபகரணங்கள் மற்றும் உதிரிப் பாகங்களை வழங்குதல், பாடவிதான அபிவிருத்தி மற்றும் ஆற்றல் அபிவிருத்தி செயற்பாடுகள் என்பன உள்ளடங்கலாக 9.5 மில்லியன் யூரோக்கள் கொண்ட உச்சத்தின் கீழ் இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் ஒஸ்ரியாவின் M/s. KUHN International Project GmbH Co KG நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.