2017-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2016/2017 பெரும் போகத்தில் நெல் கொள்வனவு நிகழ்ச்சித் திட்டம் - 2016/2017 பெரும் போகத்தில் 1.3,2 மில்லியன் மெற்றிக் தொன் நெல் அறுவடை எதிர்பார்க்கப்படுகின்றதோடு, இதில் 73,500 மெற்றின் தொன் நெல் அரசாங்கத்தினால் 17 மாவட்டங்களையும் தழுவும் விதத்தில் கொள்வனவு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்போது விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்வனவு செய்யப்படுவதோடு, இந்த நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் உட்பட கிராமிய மட்டத்தில் உரிய உத்தியோகத்தர்களின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்வதற்கு திட்டமிடப் பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்தப் போகத்தினுள் செய்கை பண்ணியுள்ள பதிவு செய்யப்பட்ட விவசாயிகளிடமிருந்து கீரி சம்பா உட்பட ஏனைய சம்பா அரிசி வகைகள் சார்ந்த நெல் கிலோ ஒன்று 41/= ரூபா என்னும் விலையிலும் நாட்டரிசி வகை சார்ந்த நெல் கிலோ ஒன்று 38/= ரூபா என்னும் விலையிலும் கொள்வனவு செய்யும் பொருட்டு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|