2017-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
களுகங்கை நீர்வழங்கல் விரிவுபடுத்தல் கருத்திட்டம் - களுத்துறை மாவட்ட மக்களுக்கு குழாய்நீர் வசதிகளை வழங்கும் நீர் விநியோகமுறைமையானது 75 வருடங்களுக்கு மேல் பழைமைவாய்ந்த ஒன்றாவதோடு, இதன் காரணமாக ஏற்பட்டுள்ள நீர்க்கசிவை குறைப்பதற்கும் துரித நகரமயமாக்கல் காரணமாக அதிகரித்துவரும் குழாய்நீருக்கான கேள்வியை பூர்த்தி செய்வதற்குமாக களுகங்கை நீர்வழங்கல் முறைமையை விருத்தி செய்வது அத்தியாவசியமானதாகும். களுகங்கை நீர்வழங்கல் விரிவுபடுத்தல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக யப்பான் சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனத்தின் மூலம் 31,810 மில்லியன் யப்பான் யென் (அண்ணளவாக 42,240 மில்லியன் ரூபா) கடன் தொகையொன்றை வழங்குவதற்கு யப்பான் அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக, இந்தக் கடன் தொகையைப் பெற்றுக்கொள்வதற்கு யப்பான் சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனத்துடன் கடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|