• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வயம்ப பல்கலைக்கழக நகர அபிவிருத்திக் கருத்திட்டம், மகாவலி இடதுகரை கீழ் ஆற்றுப்படுகை அபிவிருத்திக் கருத்திட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக அபிவிருத்திக்கான சவுதி நிதியத்திடமிருந்து நிதியுதவியை பெற்றுக்கொள்ளல்
- வயம்ப பல்கலைக்கழக நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 105 மில்லியன் சவுதி ரியால்களும் மகாவலி இடதுகரை கீழ் ஆற்றுப்படுகை அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 168.75 மில்லியன் சவுதி ரியால்களும் கொண்ட 273.75 மில்லியன் சவுதி ரியால்களுக்கான (அண்ணளவாக 73 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள்) நிதியுதவியை வழங்குவதற்கு அபிவிருத்திக்கான சவுதி நிதியம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக, இந்தக் கடன் தொகையைப் பெற்றுக்கொள்வதற்கு இணக்கப் பேச்சுக்களை நடாத்துவதற்கும் உரிய கடன் உடன்படிக்கைகளைச் செய்து கொள்வதற்குமாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.