• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குற்றத்தடுப்பு மற்றும் பொலிஸ் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றைக் கைச்சாத்திடல்
- குற்றத்தடுப்பு மற்றும் பொலிஸ் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளும் பொருட்டு 2014‑06‑06 ஆம் திகதியன்று அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் இந்த உடன்படிக்கை இதுவரை கைச்சாத்திடப்படவில்லை. இதற்கமைவாக, அரச தலைவராக அதிமேதகைய சனாதிபதி அவர்கள் 2017 மார்ச் மாதத்தில் ரஷ்யா கூட்டாட்சிக்கு மேற்கொள்ளவுள்ள விஜயத்தின் போது இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.