• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பம்பலபிட்டிய தொடர்மாடி வீடுகளின் மீள்அபிவிருத்தி
- பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவின் சிபாரிசின் பிரகாரம் இந்த விடயத்திற்குரிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ள 04-06 இடைப்பட்ட காலப்பகுதிக்குள் உரிய முதலீட்டாளரினால் 10 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை இந்த நாட்டிற்குள் அனுப்ப வேண்டுமென்னும் நிபந்தனையொன்றை உள்வாங்கி, பம்பலபிட்டிய தொடர்மாடி வீடுகளின் மீள் அபிவிருத்தி நோக்கத்திற்காக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கும் உரிய முதலீட்டாளருக்கும் இடையில் அரசாங்க - தனியார் பங்குடமை உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.