• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களனிய பொலிஸ் நிலையத்தை நிருமாணிப்பதற்காக மொறட்டுவை பல்கலைக்கழகத்தை மதியுரை நிறுவனமாக நியமித்துக் கொள்ளல்
- மக்கள் நட்புறவுமிக்க முறையான பொலிஸ் சேவையொன்றை நாடு முழுவதும் தாபிக்கும் நோக்கில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் அடையாள மாகவுள்ள சுற்றாடல் அடங்கலாக ஏனைய உரிய காரணிகளுக்கு ஏற்றவாறும் பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் அதேபோன்று பொது மக்களினதும் வசதிகளுக்கு முன்னுரிமை வழங்கி அங்கீகரிக்கப்பட்ட கட்டட வடிவமைப்புக்கு அமைவாக மாதிரி பொலிஸ் நிலையங்களை நிருமாணிக்கும் கருத்திட்ட மொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்கீழ், களனிய பொலிஸ் நிலைய நிருமாணிப்புக் கருத்திட்டத்தின் மதியுரை நிறுவனமாக மொறட்டுவ பல்கலைக்கழகத்தை நியமிக்கும் பொருட்டு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.