2017-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய இயந்திரசாதன நிறுவனத்தை பலப்படுத்துதல் - தேசிய இயந்திரசாதன நிறுவனத்தை பலப்படுத்துவது சம்பந்தமாக வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சரும் பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவும் சமர்ப்பித்த சிபாரிசுகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இந்த நிறுவனத்திற்குள்ள ஆற்றலை மதிப்பிடுவதற்காக உத்தியோகத்தர்கள் குழுவொன்று 2016‑08‑09 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அதன் கூட்டத்தில் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த உத்தியோகத்தர்கள் குழுவின் சிபாரிசின் பிரகாரம் அரசாங்க நிறுவனங்களினால் கேள்வி கோராது தேசிய இயந்திரசாதன நிறுவனத்திற்கு நேரடியாக ஒப்பந்தங்களை வழங்குவதற்கும் அரசாங்க நிறுவனங்களினால் இந்த நிறுவனத்திடமிருந்து இயந்திரசாதனங்களை வாடகைக்கு எடுப்பதற்காக தற்போது நடைமுறையிலுள்ள 25 மில்லியன் ரூபா எல்லையை 50 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பதற்குமாக வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |