• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தம்புள்ளை மற்றும் கெப்பிட்டிபொல விசேட பொருளாதார நிலையங்களை மையப்படுத்தி குளிரூட்டப்பட்ட களஞ்சியங்களை நிருமாணித்தல் - மதியுரைச் சேவை ஒப்பந்தத்தை வழங்குதல்
- சந்தை விலையை ஒருநிலைப்படுத்தல் மற்றும் பின் அறுவடை சேதங்களை குறைத்தல் என்பவற்றை அடிப்படை நோக்கங்களாகக் கொண்டு குளிரூட்டப்பட்ட களஞ்சியங்களைத் தாபிப்பதற்கு 2016 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளின் கீழ் 2,000 மில்லியன் ரூபா நிதி ஏற்பாடானது கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கமைவாக, அரசாங்க, தனியார் மற்றும் பல்கலைக்கழக கல்விமான்களைக் கொண்ட குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட சாத்தியத்தகவாய்வின் முடிவுக்கு அமைவாக தம்புள்ளை விசேட பொருளாதார நிலையத்தையும் கெப்பிட்டிபொல விசேட பொருளாதார நிலையத்தையும் மையப்படுத்தி இரண்டு குளிரூட்டப்பட்ட களஞ்சியங்களை தாபிப்பது மிகப் பொருத்தமானதென தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, இதன் சார்பில் அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டங்களை 2017 ஒக்றோபர் மாதமளவில் பூர்த்தி செய்வதற்கு இயலுமாகும் வயைில் இந்த கருத்திட்டப் பணிகளை துரிதமாக ஆரம்பிக்கும் பொருட்டு குளிரூட்டப்பட்ட களஞ்சியங்களை தாபிப்பதற்குரிய மதியுரைச் சேவைகளை பெற்றுக் கொள்ளும் ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரை கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 30.1 மில்லியன் ரூபாவைக் கொண்ட வற் வரியற்ற தொகைக்கு Desing Consultant நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.