2017-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பசுமை சக்தி அபிவிருத்தி மற்றும் வலுசக்தி வினைத்திறன் மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மன்னார் - நடுக்குடா அனுப்பீட்டு வழியினை நிருமாணித்தல் - இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான அனுப்பீட்டு வலையமைப்பை பலப்படுத்துவதற்காக பசுமை சக்தி அபிவிருத்தி மற்றும் வலுசக்தி வினைத்திறன் மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 166.6 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன்தொகையொன்று ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த கடன் தொகையைப் பயன்படுத்தி மன்னாரிலிருந்து நடுக்குடா வரை 30 கிலோமீற்றர் நீளமான அனுப்பீட்டு வழியினை நிருமாணிக்கும் ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 1,379.9 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு அனுசரணையான ஆகக்குறைந்த மதிப்பீட்டு விலையை முன்வைத்துள்ள KEC International Limited நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |