2017-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வாக்காளர்களை பதிவு செய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் - உள்நாட்டில் இடம்பெயர்ந்த ஆட்களுக்கும் வாக்களிக்க தகைமை பெற்ற அவர்களுடைய குழந்தைகளுக்கும் வாக்களிக்கும் உரிமையை பாதுகாக்கும் பொருட்டு இவ்வாறு இடம்பெயர்வதற்கு முன்னர் அவர்களுடைய நிரந்தர வசிப்பிடங்கள் அமைந்திருந்த தேர்தல் பிரிவுகளில் தொடர்ந்தும் அவர்களுடைய வாக்கினை பயன்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் விசேட சட்ட ஏற்பாடுகளைச் செய்யும் நோக்கில், சட்டவரைநரினால் வரையப்பட்ட "வாக்காளர்களை பதிவு செய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தை" அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|