• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ/ சேவை கடவுச்சீட்டுக்கள் வைத்திருப்பவர்களுக்கு விசா தேவையிலிருந்து விலக்களிப்பது சம்பந்தமாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் மியன்மார் அரசாங்கத்திற்கும் இடையிலான உடன்படிக்கை
- இலங்கைக்கும் மியன்மாருக்கும் இடையில் நிலவும் நட்புறவினை தொடர்ந்தும் மேம்படுத்தும் நோக்கில் இரு நாட்டுப் பிரசைகளுக்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்தினை இலகுபடுத்துவதற்காக செல்லுபடியாகும் இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ சேவை கடவுச்சீட்டுக்கள் வைத்திருப்பவர்களுக்கு விசா அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ளாது 30 நாட்களைக் கொண்ட காலப்பகுதிக்குள் இரு நாடுகளில் எந்தவொரு நாட்டினதும் தேச எல்லைக்குள் நுழைவதற்கு இடமளித்து இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் மியன்மார் அரசாங்கத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையானது உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன அவர்களினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப் பட்டதுடன், அமைச்சரவையினால் அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.