2017-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வரையறுக்கப்பட்ட ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தை கலைத்து மூடுதல் - சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக வரையறுக்கப்பட்ட ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தை கலைத்து மூடி, அதன் தரைப் பாதுகாப்பு பணிகளை சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கும் கடல் பாதுகாப்பு பணிகளை கடற்படைக்கும் கையளிக்கும் பொருட்டு 2016‑12‑13 ஆம் திகதியன்று அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்தக் கம்பனியை கலைத்து மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் வரை இந்தக் கம்பனியின் பொறுப்புக்கள் மற்றும் கொடுப்பனவுகள் சம்பந்தமாக நிலவும் பிரச்சினைகளையும் பொதுமக்களின் பணம் தொடர்பிலான பொறுப்பு எனபன தொடர்பில் ஆராய்ந்து பொருத்தமான தீர்வுகளை முன்மொழிவதற்கும் வரையறுக்கப்பட்ட ரக்னா லங்கா பாதுகாப்பு கம்பனியில் சேவையாற்றும் தரைப் பாதுகாப்பு வீரர்களின் தொழில் பாதுகாப்பினை உறுதி செய்து அவர்களை இலங்கை காணி நிலமீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாப னத்திற்குச் சொந்தமான வரையறுக்கப்பட்ட LRDC சேவைகள் தனியார் கம்பனிக்கு இணைப்பது சம்பந்தமான சிபாரிசுகளைச் சமர்ப்பிப்பதற்குமாக சிரேட்ட உத்தியோகத்தர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |