2017-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உள்நாட்டு சந்தையில் நிலவும் அரிசி பற்றாக்குறையும் அரிசி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் பொருட்டும் அரசியினை இறக்குமதி செய்தல் - உள்நாட்டு சந்தையில் நிலவும் அரிசி பற்றாக்குறையையும் அரிசி விலை அதிகரிப்பையும் கட்டுப்படுத்தும் நோக்கில், பாதுகாப்பான அரிசித் தொகையொன்றைப் பேணுவதற்காக தனியார்துறையின் ஊடாக அரிசி இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவையினால் 2016‑12‑20 ஆம் திகதியன்று அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, 2017‑02‑26 ஆம் திகதியன்று 113,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதோடு, இதன் விளைவாக உள்நாட்டு சந்தையில் அரிசிவிலை ஓரளவு குறைவடைந்துள்ளமை தெரியவருகின்றது. ஆயினும் உள்நாட்டு சந்தையில் நிலவும் அரிசித் தொகையானது மேலும் போதுமானதாக இல்லாமையினால் கூட்டுறவு மொத்த வியாபார நிறுவனத்தின் ஊடாக மாதமொன்றுக்கு 20,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்வதற்கும் பாதுகாப்பு இருப்பொன்றைப் பேணுவதற்குமாக 100,000 மெற்றிக் தொன் அரசாங்கத்திடமிருந்து அரசாங்கத்திற்கு கொள்வனவு செய்யும் அடிப்படையில், கூட்டுறவு மொத்த வியாபார நிறுவனத்தின் ஊடாக இறக்குமதி செய்வதற்கும் இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் அரிசி இலங்கை கூட்டுறவு மொத்த வியாபார விற்பனை நிலையங்களின் ஊடாகவும் திறந்த சந்தையிலும் விற்பனை செய்வதற்காக கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |