2017-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் 2017 மார்ச் மாதம் 08 ஆம் திகதியன்று இந்தோனேசியாவிற்கு மேற்கொள்ளவுள்ள இராஜாங்க விஜயத்தின்போது இலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையில் இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுதல் - அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் 2017 மார்ச் மாதம் 08 ஆம் திகதியன்று இந்தோனேசியாவிற்கு மேற்கொள்ளவுள்ள இராஜாங்க விஜயத்தின்போது பின்வரும் இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் இலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையில் கைச்சாத்திடும் பொருட்டு பதில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. * இந்தோனேசியக் குடியரசின் சமுத்திர அலுவல்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சுக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்தின் கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சுக்கும் இடையிலான சமுத்திர மற்றும் கடற்றொழில் ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை. * இந்தோனேசியக் குடியரசு அரசாங்கத்தின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் மற்றும் கூட்டுறவுகளுக்கான சந்தைப்படுத்தல் சேவை முகவராண்மைக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்தின் தேசிய கைப்பணி சபைக்கும் இடையிலான, பாரம்பரிய கைத்தொழில் ஒத்துழைப்பு சம்பந்தமான புரிந்துணர்வு உடன்படிக்கை. |