• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கும்புக்கன்ஓயா நீர்த்தேக்கக் கருத்திட்டம் சார்பில் விருப்பு தெரிவிப்பு அறிக்கைகளையும் கருத்திட்ட பிரேரிப்புகளையும் கோருதல்
- உத்தேச கும்புக்கன்ஓயா நீர்த்தேக்கக் கருத்திட்டத்தின் மூலம் கும்புக்கன் ஓயாவுக்குக் குறுக்காக புத்தள - மொனராகல வீதியில் (A-4), கும்புக்கன்ஓயா சந்திக்கும் இடத்தில் 48 மில்லியன் கன மீற்றர் கொள்ளவு கொண்ட நீர்த்தேக்கமொன்று நிருமாணிக்கப்படும். தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சாத்திய தகவாய்வுக்கு அமைவாக இந்த கருத்திட்டத்தின் மூலம் புதிய காணிகள் 4,280 ஹெக்டயார்களுக்கும் தற்போதுள்ள 1,255 ஹெக்டயார்களுக்கும் நீர்ப்பாசன வசதிகளை வழங்குவதற்கும் வருடாந்தம் 16 மணித்தியாலங்கள் கொண்ட கிகாவொட் மின்சார உற்பத்தியை மேற்கொள்வதற்கும் குடிநீர் மற்றும் கைத்தொழில் நடவடிக்கைகளுக்கு தேவையான நீர் வழங்குவதற்கும் இயலுமாகுமென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக, வௌிநாட்டு நிதிகளைப் பயன்படுத்தி இந்தக் கருத்திட்டத்தைப் நடைமுறைப்படுத்தக்கூடிய பொருத்தமான நிருமாணிப்புக் கம்பனியொன்றை இனங்காணும் நோக்கில் விருப்பத் தெரிவிப்பு அறிக்கைகளையும் கருத்திட்டப் பிரேரிப்புகளையும் கோரும் பொருட்டு நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.