• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கண்டி - யாழ்ப்பாணம் (A9) வீதியின் ரம்பாவையிலிருந்து மதவாச்சி வரையிலான வீதி பகுதியை புனரமைத்தல் / மேம்படுத்துதல்
- வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாகாண வீதிகளைப் புனரமைப்பதற்கும் மாகாண வீதிகளில் தெரிவுசெய்யப்பட்ட பாலங்களை புனரமைப்பதற்குமான வடபிராந்திய வீதி இணைப்புக் கருத்திட்டத்தின் (மேலதிக நிதியளித்தல்) செலவினை ஏற்கும் பொருட்டு 98 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன் தொகையொன்றை இலங்கை அரசாங்கத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த கடன்தொகையின் ஒரு பகுதியைப் பயன்படுத்தி கண்டி - யாழ்ப்பாணம் (A9) வீதியின் ரம்பாவையிலிருந்து மதவாச்சி வரையிலான (140.76 கிலோ மீற்றரிலிருந்து 150.40 கிலோ மீற்றர் வரை) வீதி பகுதியினை புனரமைக்கும் / மேம்படுத்தும் ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் ஆகக் குறைந்த அனுசரணை மதிப்பீட்டு விலைமுன்வைப்பாளரான RR Cinstruction (Pvt.) Ltd. நிறுவனத்திற்குக் கையளிக்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.