• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாத்தளை பேர்னாட் அலுவிஹாரை விளையாட்டு அரங்கிற்கு செயற்கை ஓடுபாதையொன்றை நிருமாணித்தல்
- மாத்தளை மாவட்டத்தில் தற்போது நிலவும் பெரிய விளையாட்டு மைதானமொன்றான பேர்னாட் அலுவிஹாரை விளையாட்டு மைதானம், மாத்தளை மாவட்டத்தில் மாத்திரமல்ல அநுராதபுரம், பொலன்நறுவை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, கண்டி, பதுளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலிருந்து வருகைதரும் விளையாட்டு வீரர்களினால் பயன்படுத் தப்பட்டு வருகின்றது. இந்த விளையாட்டு மைதானமானது விளையாட்டு அரங்கொன்றாக நவீனமயபடுத்தும் பணிகள் அதிமேதகைய சனாதிபதி அவர்களின் தலைமையில் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதோடு, இந்த விளையாட்டு மைதானத்தில் செயற்கை ஓடுபாதையொன்றை நிருமாணிப்பது காலத்தின் தேவையாகுமெனவும் கவனத்திற் கொள்ளப்பட்டது. இதற்கமைவாக, மாத்தளை மாவட்டத்தின் பேர்னாட் அலுவிஹாரை விளையாட்டு அரங்கிற்காக 400 மீற்றர் செயற்கை ஓடுபாதையொன்றை புதிதாக நிருமாணிப்பதற்கும் இதன்சார்பில் மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகத்தின் மதியுரைச் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குமாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.