• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முத்துராஜவெலவில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் வரை விமானங்களுக்கான எரிபொருள் கொண்டு செல்லும் பொருட்டிலான வசதிகளை ஏற்பாடு செய்தல்
- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் தற்போதைய நவீனமயபடுத்தல் பணிகளுக்கு ஒருங்கிணைவாக விமானங்களுக்கான எரிபொருள் தேவை எதிர்காலத்தில் அதிகரிக்குமென மதிப்பிடப்பட்டுள்ளமையினால், அவ்வாறு அதிகரிக்கும் கேள்விக்கு ஏற்றவாறு எரிபொருளை தொடர்ச்சியாக வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு இயலுமாகும் வகையில் விமானங்க ளுக்கான எரிபொருள் கொண்டுசெல்வதற்காக ஒதுக்கப்பட்ட குழாய் வழி யொன்றை முத்துராஜவெல எண்ணெய் தொகுதியில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் வரை தாபிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இது சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட சாத்தியதகவாய்வொன்றின் மூலம் 75,000 கன மீற்றர் கொண்ட மொத்த தொழிற்பாட்டு ஆற்றல் கொண்ட விமானங்களுக்கான எரிபொருள் சார்பில் ஒதுக்கப்பட்ட நான்கு (04) உருக்குத் தாங்கிகளை நிருமாணிப்பதற்கும் 23 கிலோ மீற்றர் நீளமான குழாய் வழியொன்றை நிருமாணிப்பதற்கும் இதனுடன் தொடர்புபட்ட ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்தக் கருத்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை யினால் நியமனம் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவொன்றையும் தொழினுட்ப மதிப்பீட்டுக் குழுவொன்றையும் நியமிப்பதற்கும் திறந்த சர்வதேச போட்டிகரமான கேள்வி முறையைப் பின்பற்றி இதன்சார்பில் கேள்வி கோருவதற்குமாக பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.