• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திறமுறை ரீதியில் முக்கியமான அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளுக்கு கூட்டு நிறுவன நோக்க அறிக்கைகளை அறிமுகப்படுத்துதல்
- அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் நாட்டின் பொருளாதார நோக்கங்களை அடைவதற்கு சார்பாக பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு “கூட்டு நிறுவன நோக்கம் பற்றிய வௌிப்படுத்தல்” என்பதை பயன்படுத்த முடியும். இதன் போது பொதுவான பொறுப்புக் கூறலை அதிகரித்து விருத்தி செய்யப்பட்ட கூட்டு நோக்கங்கள், பலப்படுத்தப்பட்டதும் நிலையானதுமான நிதி முகாமைத்துவம், போட்டி மற்றும் சர்வதேச தரங்களுக்குச் செல்தல் மற்றும் பயனுள்ள மனிதவளங்களின் மூலம் திறைசேரியில் தங்கியிருக்காது சுயாதீன நிறுவனங்களாக செயற்படுவதற்கு அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளை ஊக்குவிக்கவும் வசதிகளும் வழங்கப்படும். இதற்கமைவாக, இலங்கை மின்சாரசபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை, விமான நிலையங்கள், விமான சேவைகள் (இலங்கை) கம்பனி மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை போன்ற திறமுறை ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த அரசாங்க தொழில்முயற்சிகள் சம்பந்தமாக நிதி அமைச்சின் செயலாளர், இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் உரியதாகும் வரிசை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் உரிய நிறுவனங்களின் தலைவர்கள் ஆகிய முத்தரப்பினால் கைச்சாத்திடப்படும் “கூட்டு நிறுவன நோக்கம் பற்றிய வௌிப்படுத்தல்” என்பதை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.