2017-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பல்வகைமை உயிரியல் பாதுகாப்புப் பற்றிய கார்டிஜினா நெறிமுறைக்கு ஒத்திசைவாக தேசிய பல்வகைமை உயிரினப் பாதுகாப்பு கட்டமைப்பினை நடைமுறைப்படுத்தும் கருத்திட்டம் - உலக மக்களினால் மரபணு மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்ட செடிகள் மற்றும் உயிரினங்களின் மூலம் சுற்றாடலுக்கும் மனித சுகாதாரத்திற்கும் ஏற்படக்கூடிய தாக்கத்தை குறைப்பதற்கும் தடுப்பதற்குமான நோக்கில் உயிரியல் பாதுகாப்பு தொடர்பிலான "கார்டிஜினா நெறிமுறை" தாபித்துக் கொள்ளப்பட்டுள்ளதோடு, இலங்கையும் இந்த நெறிமுறையில் ஒரு தரப்பாகவுள்ளது. பல்வகைமை உயிரின தொழினுட்பத்தினால் மனித சுகாதாரத்திற்கும் சுற்றாடலுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்பானது குறைத்துக் கொள்ளப்படுவதோடு, இதன் மூலம் இலங்கை பெற்றுக் கொள்ளக்கூடிய ஆகக்கூடிய நலன்களை அடையும் நோக்கில் "தேசிய உயிரியல் பாதுகாப்பு கட்டமைப்பை" நடைமுறைப்படுத்தும் கருத்திட்டமொன்று சார்பில் உலகளாவிய சுற்றாடல் வசதியளித்தலின் கீழ் வழங்குவதற்கு உடன்பட்டுள்ள 2.36 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட நிதி ஏற்பாட்டினை பயன்படுத்தி 2017-2020 காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |