2017-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசாங்கத்தின் பெறுகை செயற்பாடுகளை துரிதப்படுத்துதல் - அரசாங்கத்தின் பெறுகை செயற்பாடுகளை துரிதப்படுத்துவது சம்பந்தமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அதிமேதகைய சனாதிபதி அவர்களினதும் மாண்புமிகு பிரதம அமைச்சரினதும் நிதி அமைச்சரினதும் இயைபுள்ள அரசாங்க உத்தியோகத்தர்களினதும் பெறுகை ஆணைக்குழுவினதும் கொள்வனவு மேன்முறையீட்டு சபையினதும் உறுப்பினர்கள் ஆகியோர்களினதும் பங்களிப்புடன் 2017‑02‑03 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட கூட்டத்திலே எடுக்கப்பட்ட பின்வரும் தீர்மானங்கள் அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. * அரசாங்கத்தின் பெறுகை செயற்பாடுகள் சம்பந்தமாக ஏற்புடையதாகும் அரசியலமைப்பிலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக தற்போது பயன்படுத் தப்பட்டுவரும் கொள்வனவு வழிகாட்டலையும் நிதி அமைச்சினால் காலத்திற்கு காலம் வௌியிடப்பட்டுள்ள ஏனைய ஆலோசனைகளையும் வர்த்தமானி ஊடாக வௌிப்படுத்துவதற்கு தேசிய பெறுகை ஆணைக்குழு நடவடிக்கைகளை எடுத்தல். * அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள அரசாங்க பெறுகைகளுக்கு ஏற்புடைத்தாக்கிக் கொள்ளப்பட வேண்டிய புதிய காலக்கட்டமைப்பை அரசாங்க கொள்வனவு வழிகாட்டலில் சேர்த்தல். * அரசாங்க கொள்வனவு செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கு ஏதுவாய் அமையும் மின்னணு கொள்வனவு (e-procurement) போன்ற நவீன பெறுகை போக்குகள் தொடர்பில் கவனம் செலுத்தி நடைமுறையிலுள்ள கொள்வனவு வழிகாட்டலை பொருத்தமானவாறு திருத்துதலும் இற்றைப்படுத்துதலும். * அரசாங்கத்தில் நிர்மாணிப்பு பணிகளின் போது வடிவமைப்புகளுக்காக செலவிடப்படும் காலம் உட்பட நிதியினை குறைத்துக் கொள்ளும் நோக்கில் தேவையான சந்தர்ப்பங்களில் பொருத்தமான திருத்தங்களுடன் பொதுவான நிர்மாணிப்பு வடிவமைப்புகளின் மீது செயற்படுதல். * அரசாங்கத்தின் கொள்வனவு தொடர்பிலான தொழில்நுட்ப அறிவினை அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தல். |