• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2017‑02‑19 ஆம் திகதியன்று களுத்தறை, கட்டுகுறுந்த பிரதேசத்திற்கு கிட்டிய கடலில் படகொன்று கவிழ்ந்ததன் காரணமாக நிகழ்ந்த விபத்தினால் மரணமடைந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் நட்டஈடு வழங்குதல்
- 2017‑02‑19 ஆம் திகதியன்று மத வழிபாட்டு நடவடிக்கை யொன்றுக்காக மீன்பிடி படகுகள் சிலவற்றின் மூலம் பேருவலையிருந்து களுத்துறை வரை கடல் மார்க்கமாக செல்கையில் களுத்தறை கட்டுகுறுந்த பிரதேசத்திற்கு கிட்டிய கடலில் படகொன்று கவிழ்ந்ததன் காரணமாக நிகழ்ந்த விபத்தினால் மரணமடைந்த ஒருவர் சார்பில் 100,000/- ரூபா வீதமும் காயமடைந்த ஒருவர் சார்பில் 20,000/- ரூபாவும் நட்டஈடாக வழங்கும் பொருட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.