• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மொறகொட கால்வாய் மற்றும் பன்சல துணை வீதி ஆகியவற்றை புனரமைத்தல்
- கண்டி மற்றும் காலி நகரங்களில் திறமுறை நகர அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 147 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட கடன் தொகையொன்று சருவதேச அபிவிருத்திக்கான சமவாயத்தினால் வழங்கப்பட்டுள்ளது. இந்த கடன் தொகையிலிருந்து ஒரு பகுதியைப் பயன்படுத்தி காலிப் பிரதேசத்திலுள்ள மொறகொட கால்வாய் மற்றும் பன்சல துணை வீதி ஆகியன புனரமைக்கப்படவுள்ளன. இதற்கமைவாக, இதற்குரிய ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 844,907,205/- ரூபாவைக் கொண்ட வற் தவிர்ந்த தொகைக்கு M/s Business Promoters & Partners Engineering (pvt.) Ltd. கம்பனிக்கு வழங்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.