2017-02-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய மகா வித்தியாலயத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் - சுமார் ஆயிரம் மாணவர்கள் வரை கல்வி கற்கும் புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய மகா வித்தியாலயமானது, மத்திய மாகாணத்தின் கம்பளை கல்வி வலயத்தில் நூறு வருடங்கள் பழைமை வாய்ந்த தமிழ்மொழிமூல பாடசாலையொன்றாகும். இந்தப் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலைகளிலிருந்து கல்வி கற்கும் பெருந்தோட்ட பிள்ளைகளுக்கு தேவையான வசதிகளுடனான பாடசாலை யொன்றாக அபிவிருத்தி செய்யக்கூடிய வளங்களைக் கொண்ட பாடசாலைகள் சிலவற்றுள் மையப்பாடசாலை இதுவாகும். இதற்கமைவாக, நாட்டிலுள்ள குழந்தைகள் அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்பினை வழங்கும் தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு எடுக்கப்படும் விசேட நடவடிக்கை யொன்றாக இந்திய அரசாங்கத்தின் அனுசரணையின் கீழ் இந்த கல்லூரியின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் இந்திய குடியரசுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கும் குறித்த உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி பணிகளை மத்திய மாகாண கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் கல்வி அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தும் பொருட்டும் கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |