• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய பெண்கள் ஆணைக்குழுவைத் தாபித்தல்
- இலங்கையில் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் அவர்களை பலப்படுத்துவதற்கும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, இலங்கை மகளிர் பணியகம், தேசிய மகளிர் குழு ஆகிய நிறுவனங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுத்தாலும் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகளுக்கு செயற்பாட்டு ரீதியில் தலையிட்டு புலனாய்வு செய்வதற்கு அத்துடன் தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான அதிகாரம் இந்த நிறுவனங்களுக்கு இல்லை. இதற்கு அமைவாக பெண்களின் மேம்பாட்டின் பொருட்டு நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக அரசியலமைப்பின் மூலமும் பெண்களுக்கு எதிரான சகல விதத்திலுமான வன்முறைகளை ஒழிப்பது தொடர்பிலான சமவாயத்தின் மூலமும் அரசாங்கத்திற்கு கையளிக்கப்பட்டுள்ள பொறுப்புகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இலங்கை பெண்களின் மேம்பாட்டின் பொருட்டு செயலாற்றுவதற்காக "தேசிய பெண்கள் ஆணைக்குழுவை" தாபிப்பதற்காக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சந்திராணி பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.